Saturday, June 29, 2024
Home » கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாப பலி

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாப பலி

by Mahaprabhu

தர்மபுரி, ஜூன் 19: அரூர் கோட்டப்பட்டி மலைத்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (55). இவர் கடந்த 10 வருடங்களாக கண்பார்வை இழந்து, வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற போது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், அண்ணாதுரையை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

11 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi