வடமதுரை, ஜூன் 14: வடமதுரை அடுத்த தாமரைப்பாடி கோவில் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (19). கூலித்ெதாழிலாளி. இவர் கடந்த ஜூன் 8ம் தேதி அப்பகுதியிலுள்ள ஒரு விவசாய கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது அவர், குளித்து விட்டு ஏறிய போது திடீரென நிலைதடுமாறி படிக்கட்டில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சரவணனை, நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.