கிட்டாம்பாளையத்தில் சாலை அமைக்க பூமி பூஜை

சோமனூர்,ஜன.25:கிட்டாம்பாளையம் ஊராட்சி வினோபாநகரில் உள்ள மயானத்திற்கு பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கும் மற்றும் கிட்டாம் பாளையத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கும் 15வது நிதி குழு மாநியத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூஜை போடப்பட்டது.ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்பன் ரங்கசாமி,கூட்டுறவு வங்கி தலைவர் ராக்கியப்பன்,மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி,ஊராட்சி உறுப்பினர் நாகேஸ்வரன், தங்கராஜ் மற்றும் ராமு, குமார், தங்கராஜ், பார்திபன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்