நித்திரவிளை, அக் 11; மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தூத்தூர் ஊராட்சி உறுப்பினர் ஜோஸ்பில்பின் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது , தமிழக அரசு மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு இனி வரும் காலங்களில் நிவாரண உதவி ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேவேளையில் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் இணைந்த மீனவர்களுக்கு, அரசு இந்த வருடம் தடைக்கால நிவாரணம் வழங்கவில்லை. ஆகையால் தூத்தூர் மண்டலத்தை சார்ந்த மீனவர்கள் 762 பேர் கிசான் திட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். அதே நேரம் மீனவர்கள் தங்களை கிசான் திட்டத்தில் இருந்து விடுவித்தாலும், அரசு அதிகாரிகள் மீனவர்கள் பெயர்களை விடுவிக்காததால், மீன்வளத்துறை மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து வருகிறது. ஆகவே முதல்வர் நேரடி கவனம் செலுத்தி கிசான் திட்டத்தில் இருந்து விடுவித்துக் கொண்ட மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
கிசான் திட்டத்தில் இருந்து விலகிய மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை
previous post