காவேரிப்பட்டணம் அருகே சைக்கிள் மீது கிரேன் மோதி பெண் பலி

 

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே சைக்கிள் மீது கிரேன் வாகனம் மோதியதில் பெண் படுகாயமடைந்து உயிரிழ்ந்தார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மல்லுப்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி கண்ணகி (33). இவர் காவேரிப்பட்டணம் டிவிஎஸ் மில்மேடு பகுதியில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், கண்ணகி சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் வாகனம், சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கண்ணகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு