காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆய்வு

தர்மபுரி, அக்.9: தர்மபுரி மாவட்ட காவல் துறையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை எஸ்பி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்ட காவல் துறையில் 40க்கும் மேற்பட்ட பஸ், லாரி, ஜீப், வஜ்ரா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட டூவீலர் வாகனங்கள் பயன் படுத்தப்படுகிறது. இந்த வாகனங்களை நேற்று எஸ்பி மகேஸ்வரன் மாதாந்திர ஆய்வு செய்தார். அப்போது, காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப் படுகிறதா எனவும், எரிபொருள் சரியான அளவில் பயன்படுத்தப் படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வாகனங்கள் தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது, குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்களை உடனடியாக சீரமைக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது எஸ்பி இன்ஸ்பெக்டர் அன்பழகன், எஸ்ஐ பாரூக் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு