தர்மபுரி, மார்ச் 14: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று நடந்த குறை தீர்க்கும் நாள் முகாமில், 72 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பிரதிவாரம் புதன்கிழமை பொதுமக்களின் மனு மீது குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வாரத்திற்கான குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு ஏடிஎஸ்பி இளங்கோவன் தலைமை வகித்தார். இம்முகாமில் மொத்தம் 74 மனுக்கள் பெறப்பட்டது. 72 மனுக்களும் தீர்வு காணப்பட்டது. முகாமில் போலீஸ் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்ஐ, போலீசார் கலந்து கொண்டனர்.