திருவள்ளூர்: காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு காவல் நிலையங்கள் அலுவலகங்கள் காவல் துறைக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் மேற்பார்வையில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம், ஆயுதப்படை வளாகம், ஆயுதப்படை காவலர் குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை படுத்தும் பணி துவக்கப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்து, காவலர் குடியிருப்பு பகுதியை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதை ஆய்வு செய்தார். இதில் கூடுதல் எஸ்பி ஜேசுராஜ், டிஎஸ்பி பாஸ்கரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகரமன்ற உறுப்பினர் வசந்தி வேலாயுதம் மற்றும் காவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்….
காவலர் குடியிருப்பு பகுதிகளில் தூய்மை பணி மும்முரம்
previous post