கால்வாய், சிறு பாலங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

ராசிபுரம், ஆக.9: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதையொட்டி, நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களில் நீரோட்ட பாதைகள் மற்றும் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறையினர் ஆகஸ்ட் மாதத்தை பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைபிடிக்கின்றனர். இந்த மாதத்தில் பாலங்களை மட்டும் தனி கவனத்துடன் பார்த்து பராமரிப்பு பணி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் முதல் ஆத்தூர் வரையிலான மாநில நெடுஞ்சாலையில் உள்ள சிறு பாலங்கள், அதையொட்டியுள்ள நீரோட்ட பாதைகள், பாலங்களை ஒட்டியுள்ள பகுதியில் கால்வாய்களில் அடைப்புகள், முட்புதர்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணிகளை ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் ஜெகதீஸ்குமார் தலைமயைில், உதவிப்பொறியாளர் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி