கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

ஆவடி: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு – அயத்தூர் செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(46), கட்டிடத்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன் குடிபோதையில் நண்பரை பார்க்க புறப்பட்டார். பின்னர் அவரும் நண்பரும் மது அருந்திவிட்டு தொட்டிக்கலை பகுதியில் உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் கை, கால், முகம் கழுவச்சென்றனர். அப்போது வெங்கடேசன் கால்தவறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார். பின்னர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.இதுகுறித்து அவரது நண்பர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் செவ்வாய்ப்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை தேடினர். ஆனாலும் அவாது உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஆவடி அருகே மோரை பகுதியில் வெங்கடேசன் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ஆவடி டேங்க் பேட்டரி இன்ஸ்பெக்டர் ஜெகந்நாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை