கால்பந்து போட்டி

திண்டுக்கல், மே 14: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 2வது டிவிசன் போட்டியில் செயின்ட் ஜோசப் மில்ஸ் கால்பந்து அணி, சுந்தரம் மெமோரியல் கால்பந்து அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. 3ம் டிவிசன் போட்டியில் பத்மாவதி பெருமாள் மெமோரியல் கால்பந்து அணி, பட்டுமணி கால்பந்து அணியை 4:1 என்ற கோல் கணக்கில் வென்றது. 4ம் டிவிசன் போட்டியில் கீதா டிம்பர்ஸ் கால்பந்து அணி, அரசன் கால்பந்து அணியை 5:1 என்ற கோல் கணக்கில் வென்றது. சீட்ஸ் கால்பந்து அணி, பீலே ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகளுக்கிடையே நடந்த போட்டி கோல்கள் இன்றி டிராவில் முடிவடைந்தது. இத்தகவலை கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்