காலில் காயத்துடன் தவிக்கும் காட்டு யானை

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை,மான் என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் டாப்சிலிப்- பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில், காட்டு யானை ஒன்றின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், நடக்க முடியாமல் கடந்த சில நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதாக தெரிய வந்தது.காயம் காரணமாக யானை உணவை தேட முடியாமல் தவித்து வரும் தகவலறிந்து யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ள வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். யானையின் நிலை குறித்து அறிந்தவுடன் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்