கார்-வேன் மோதல் 2 பேர் பரிதாப பலி

திருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சுதா. இவரது உறவினர்கள் சித்ரா, கல்பனா, வனஜா(35). இவர்கள் 4 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் இன்று நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு புறப்பட்டனர். இவர்கள் திருவண்ணாமலை வழியாக காரில் சென்றனர். இந்த காரை டிரைவர் பாலன்(40) என்பவர் ஓட்டினார்.இன்று காலை 7.30 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை-செங்கம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்து இடிபாட்டில் சிக்கினர். அப்பகுதி மக்கள் விரைந்து வந்து இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் பாலன், வனஜா ஆகியோர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காரில் பயணம் செய்த சுதா, சித்ரா, கல்பனா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மூன்று பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சரக்கு வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது

திட்ட மதிப்பீடு தயாரிக்க வல்லுநர் குழு சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உறுதி