கார் மோதி முதியவர் படுகாயம்

திங்கள்சந்தை, ஏப். 4: உதயமார்த்தாண்டம் அருகே உள்ள தேவிகோடு நல்லாஞ்சுவிளையைச் சேர்ந்தவர் சார்லஸ் (66). இவர் இரு தினங்களுக்கு முன்பு மதியம் சுங்கான்கடை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது சகோதரர் தனம் என்பவரை பார்க்க சுங்கான்கடை சென்றார். அவரை பார்த்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். நடந்து வந்த அவர் மருத்துவமனை முன்புள்ள நாகர்கோவில் – தக்கலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது வேகமாக வந்த கார் சார்லஸ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவரது மகன் அதீஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் கார் டிரைவர் கோட்டாறு செட்டித்தெருவை சேர்ந்த அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை