கார் மோதி தொழிலாளி பலி

 

திருப்புவனம், ஜூலை 4: திருப்புவனம் அருகே பாப்பான்குளத்தை சேர்ந்தவர் தினேஷ்(30). ஜேசிபி ஆப்ரேட்டர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மானாமதுரை சென்று விட்டு நான்கு வழி சாலையிலிருந்து பாப்பாங்குளம் லாடனேந்தல் விலக்கில் இருசக்கர வாகனத்தில் திரும்பினார். பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியதில் தலை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார். திருப்புவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிறப்பு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விழா

ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு