கார் மீது மணல் லாரி மோதல்: தம்பதி உடல் நசுங்கி சாவு

மெயின்புரி: உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள தன்ஹர் பகுதியில் மணல் ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் மீது மணல் லாரி பயங்கரமாக மோதியது. இதில், காரில் வந்த கணவன், மனைவி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, காரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், கணவன், மனைவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனரும் படுகாயமடைந்தனர். இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் விரைந்தனர். இறந்த தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!