காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை கொண்டாடினார். அப்போது, வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் மோடியுடன் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் தமிழில் பிரபலமான பாடலான சுராங்கனி பாடலை மைக் முன் கூட்டாக பாடி அசத்தினர்.