காரைக்காலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை

காரைக்கால், ஏப். 4: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நேரு நகரில் உள்ள அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் உள்ள பட்ட மேற்படிப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அரையை காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி முனைவர் மணிகண்டன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி பொதுப்பணி துறையால் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் முடிவு பெறும் நிலையில் அப்பணிகளையும் பார்வையிட்டார்.ஆய்வின் போது தேர்தல் துறை சிறப்பு அதிகாரி பாலு (எ ) பக்கிரிசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related posts

வனத்துறை பகுதியில் மணல் அள்ளிய 4 பேர் கைது

புதுவையில் 8 எம்எல்ஏக்கள் ரகசிய டெல்லி பயணம்

கிணற்றில் விழுந்து முதியவர் சாவு