காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து இயக்க வேண்டும்

 

காரைக்கால்,செப்.21: காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து இயக்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரை சென்னையில் காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் ஆகியோர் சந்தித்தனர். இதுகுறித்து நாஜிம் எம்.எல்.ஏ கூறியதாவது:பவுர்ணமி கிரிவலம் செல்ல காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏராளமானோர் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனால் பவுர்ணமியன்று காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்து இயக்க அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு அவர் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.அதுபோல புதுவை அரசும், காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வோர் வசதியை கருத்தில் கொண்டு பேருந்து இயக்க முன்வர வேண்டும் என்றார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி