காரில் இருந்து கொண்டே முகத்தை பாலிதீன் பையால் மூடி நைட்ரஜன் காஸை செலுத்தி இன்ஜினியர் தற்கொலை: பெங்களூருவில் பயங்கரம்

பெங்களூரு: காரில் இருந்து கொண்டே முகத்தை பாலிதீன் பையால் மூடி நைட்ரஜன் காஸை செலுத்தி இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார் (51). சாப்ட்வேர் இன்ஜினியர். பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். மனைவி, பிள்ளைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இதய பிரச்னையால் அவதிப்பட்ட விஜயகுமார், அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகும், மூச்சு விடுவதில் சிரமம் உள்பட பல பிரச்னை வாட்டி வதைத்தது. மனம் உடைந்தார். விரக்தியில், தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் கூறியுள்ளார். மனைவி அதிர்ச்சியடைந்தார். அதே நேரத்தில் ஆறுதல் கூறி விஜயகுமாரை சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் குருபரஹள்ளியில் உள்ள வாகன பணிமனைக்கு சென்று காரை சுத்தம் செய்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விஜயகுமார் காரில் புறப்பட்டு சென்றார். குருபரஹள்ளி பைப்லைன் சாலையில் உள்ள பூங்கா முன் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்த ஒரு நபரை அழைத்து, ‘எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதிக வெயில் அடிப்பதால் நான் காருக்குள் சிறிது நேரம் தூங்க இருக்கிறேன். அதனால் கவரால் காரை மூடும்படியும் கூறியுள்ளார். உடனே அந்த நபரும் காரை கவரால் மூடிவிட்டு சென்றார். பின்னர் காரின் கண்ணாடிகளை அடைத்தார். பின்னர் ஏற்கனவே காரில் எடுத்து வந்து இருந்த நைட்ரஜன் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்ட விஜயகுமார், தனது முகத்தை பாலிதீன் பையால் மூடி மூச்சுவிட முடியாதபடி செய்தார். மேலும் பாலிதீன் பைக்குள் நைட்ரஜன் கியாசை செலுத்தினார். சிறிது நேரத்தில் நச்சு காற்றால் மூச்சுவிட முடியாமல் திணறிய விஜயகுமார் காருக்குள்ளேயே இறந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாக கார் நின்றதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கவரை அகற்றினர். காரின் கதவில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டிருந்தது. அதில், ‘பொதுமக்கள் எனது கார் கவரை திறக்க வேண்டாம். உள்ளே விஷ காற்று இருப்பதால் உங்களுக்கு பிரச்னை ஏற்படும். போலீசார் மற்றும் திறமையான குழு எனது கார் கதவை திறக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றினர். பின்னர், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், இதய நோயால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார், முகத்தை பாலிதீன் பையால் மூடி நைட்ரஜன் கியாசை திறந்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது….

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு