காரிமங்கலம் வாரச்சந்தையில் 18.50 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம்: காரிமங்கலம் வாரச்சந்தையில் 18.50 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது. காரிமங்கலத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி காவேரிப்பட்டணம், வேலம்பட்டி, பண்ணந்தூர், அரசம்பட்டி, நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, புலியூர், பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். சுமார் ஒன்றரை லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ₹7 முதல் ₹12 வரை பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ₹18.50 லட்சம் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து அதிகரித்த போதிலும், விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு