காரமடை அருகே சூதாடிய 10 பேர் கும்பல் கைது

 

காரமடை, மார்ச் 14: காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையம் பாலாஜி நகர் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது, பாலாஜி நகர் தனியார் கோழிப்பண்ணை அருகே கும்பல் ஒன்று சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனையடுத்து கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளை சேர்ந்த சாதிக் பாட்ஷா (36), ராஜா (24), தமிழ்ச்செல்வன் (27), அசோக் (35), சதீஷ்குமார் (32), நரேஷ் பாபு (33), உதயகுமார் (27), முகமது அசாருதீன் (23),முத்துக்குமார் (27), பழனிச்சாமி (34) என்பதும், சட்டவிரோதமாக பணம் வைத்து வெட்டாட்டம் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்த காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் ரூ.68,400ஐ பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை