Saturday, September 28, 2024
Home » காரமடை அருகே சூதாடிய 10 பேர் கும்பல் கைது

காரமடை அருகே சூதாடிய 10 பேர் கும்பல் கைது

by Arun Kumar

 

காரமடை, மார்ச் 14: காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையம் பாலாஜி நகர் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது, பாலாஜி நகர் தனியார் கோழிப்பண்ணை அருகே கும்பல் ஒன்று சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனையடுத்து கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளை சேர்ந்த சாதிக் பாட்ஷா (36), ராஜா (24), தமிழ்ச்செல்வன் (27), அசோக் (35), சதீஷ்குமார் (32), நரேஷ் பாபு (33), உதயகுமார் (27), முகமது அசாருதீன் (23),முத்துக்குமார் (27), பழனிச்சாமி (34) என்பதும், சட்டவிரோதமாக பணம் வைத்து வெட்டாட்டம் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்த காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் ரூ.68,400ஐ பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

You may also like

Leave a Comment

fourteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi