Tuesday, July 2, 2024
Home » காரமடை அருகே கன்றுக்குட்டியை திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த விவசாயி

காரமடை அருகே கன்றுக்குட்டியை திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த விவசாயி

by Mahaprabhu

காரமடை ஏப்.30: காரமடை அருகே கன்றுக்குட்டியை திருடிய வாலிபரை பிடித்து விவசாயி போலீசில் ஒப்படைத்தார். காரமடையை அடுத்துள்ள சீளியூர் பகுதியை சேர்ந்தவர் ஊமத்தூரப்பன். இவரது மகன் கருப்பசாமி (43). தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது தோட்டத்தில் உள்ள மாட்டுச்சாலையில் மாடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், நேற்று காலையில் சென்ற போது அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளில் ஒரு கன்றுக்குட்டியை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார்.

இதனையடுத்து அவர் அக்கம்பக்கம் விசாரித்ததில் தாயனூர் பகுதியை சேர்ந்த மணியன் என்பவரது மகன் சந்தோஷ் குமார்(28) என்பவர் கன்றுக்குட்டியை கணுவாய்பாளையம் டாஸ்மாக் கடை அருகே திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தனது நண்பர்களுடன் அப்பகுதிக்கு விரைந்து சென்ற கருப்பசாமி கன்றுக்குட்டியை திருடி சென்ற சந்தோஷ் குமாரை பிடித்து காரமடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

16 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi