காப்பகத்தில் தங்கிய சிறுமி பலாத்காரம்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு மாணவி. இவருக்கு தாய், தந்தை கிடையாது என்பதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சேர்ந்து படித்து வந்தார். அப்போது, அங்கு காப்பக உரிமையாளரின் மகன் கார்த்திக் என்ற வாலிபர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தைகூறி பழகி வந்துள்ளார். மேலும் தனிமையில் இருந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த காப்பகத்தில் போதிய வசதிகள் இல்லை எனக்கூறி சில மாதங்களுக்கு முன்பு அந்த காப்பகத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. இதையடுத்து அந்த மாணவி அரசு காப்பாகத்திற்கு மாற்றப்பட்டு காட்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை குறித்து தற்போதுள்ள அரசு காப்பக விடுதி கண்காணிப்பாளரிடம் கூறி அழுததாக தெரிகிறது. இதுகுறித்து விடுதி கண்காணிப்பாளர் காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கார்த்திகை தேடிவருகின்றனர்….

Related posts

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்

ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது