காத்திருப்பு போராட்டம்

சிவகங்கை, ஆக. 31: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்கரமிப்பு அகற்றலில் சட்டப்படி செயல்பட்ட தாசில்தார் மனோஜ்முனியனை தற்காலிக பணி நீக்கம் செய்த கலெக்டரை கண்டித்தும், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சம்பவம் தொடர்பாக ஆக.29ல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் நாகநாதன், மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கவாசகம், பாலமுருகன், அசோக்குமார், ராஜாமுகமது மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

கருத்தப்பாலம் பகுதியில் சீரமைப்பு பணி

தூத்துக்குடியில் ஜூலை6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு