Monday, July 1, 2024
Home » காதில் ஹெட்போன் மாட்டியவாறு தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

காதில் ஹெட்போன் மாட்டியவாறு தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

by Ranjith

 

விருதுநகர், அக்.2: விருதுநகர் ரயில் நிலையத்தில் காதில் ஹெட்போன் மாட்டியவாறு தண்டாவளத்தை கடக்க முயன்ற டெய்லர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மேலரதவீதியை சேர்ந்தவர் தங்கமணி(65). டெய்லர். இவர் நேற்று மாலை கோவை-நாகர்கோவில் ரயிலில் விருதுநகர் வந்து இறங்கினார். இரண்டாவது பிளாட்பாரத்திலிருந்து இறங்கி 1வது பிளாட்பாரத்தை அடைய தண்டாவளத்தை கடக்க முயன்றார்.

அப்போது 2வது பிளாட்பாரத்தில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் வந்தது. தங்கமணி காதில் ஹெட்போன் மாட்டி இருந்ததால் ரயில் வரும் சத்தம் அவருக்கு கேட்கவில்லை. இதனால் ரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

six + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi