காதல் திருமணம் செய்த 2 நாளில் தனியார் வங்கி ஊழியர் கடத்தலா? போலீஸ் விசாரணை ஆரணி அருகே

ஆரணி, ஜூலை 7: காதல் திருமணம் செய்த 2 நாளில் தனியார் வங்கி ஊழியர் மாயமாகி உள்ளார். அவரை யாராவது கடத்தி சென்றார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சொரக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் அஜீத்(23). இவர், ஆரணியில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஊட்டி பகுதியை சேர்ந்த ஜான்சன் மகள் ராதிகா(22), என்பவருடன், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 3ம் தேதி அன்று ராதிகாவை அஜீத் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், தச்சரம்பட்டு கிராமத்தில் உள்ள நரசிம்மன் கோயிலில் அஜீத் அவரது பெற்றோர் முன்னிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு, இருவரும் அஜீத் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அஜீத் நேற்றுமுன்தினம் காலை அவரது மனைவி ராதிகாவிடம் பதிவு திருமணம் செய்ய வேண்டும், அதற்கான தகவல்களை ஆரணிக்கு சென்று கேட்டுவர செல்கிறேன் என்று கூறிவிட்டு அஜீத் வீட்டை வீட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அஜீத் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை யாராவது கடத்திச்சென்றார்களா என்றும் தெரியவில்லை. இதுகுறித்து, அஜீத்தின் தந்தை தமிழரசன் ஆரணி தாலுகா போலீசில் நேற்று கொடுத்த புகாரின்போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் திருமணம் நடந்து 2 நாட்களில் மயமான அஜீத்தை தேடி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்