காதலித்து திருமணம் செய்யும் வாலிபர்கள் மீது போக்சோவா?: போலீசாருக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

அலகாபாத்: உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் அதுல் மிஸ்ரா. 14 வயது  சிறுமியை காதலித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு ஓடி, கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் மகளை கடத்தி சென்றதாக மிஸ்ரா மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மிஸ்ராவையும் சிறுமியையும் சில  மாதங்களுக்கு பின் கண்டுபிடித்தனர். அப்போது, அந்த சிறுமி ஒரு குழந்தைக்கு தாயாகி இருந்தார். அவர் கையில் கைக்குழந்தை இருந்தது. இதனால், பெற்றோருடன் செல்லும்படி சிறுமியிடம் போலீசார் கூறினர். ஆனால், சிறுமி மறுத்து விட்டார். வேறு வழியின்றி, குல்தாபாத்தில் உள்ள இளம் பெண்கள் காப்பகத்தில் சிறுமி சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கில் போக்சோ பிரிவில் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ராகுல் சதுர்வேதி, ‘பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை காப்பதற்காகவே போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், காதலித்து திருமணம் செய்த இளம் பருவத்தினர் மீது இந்த சட்டத்தில் வழக்கு பதியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காதல் வயப்படும் சிறார்கள்,  இளைஞர்களுக்கு எதிராக குடும்பத்தினர் கொடுக்கும் புகார்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்படுவது தவறு. 2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், இவர்களுக்கு,  ஒரு குழந்தையும்  பிறந்துள்ளது. அந்த வாலிபருக்கு எதிராக பாலியல் ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எதையும் சிறுமி கூறவில்லை. இதனால், அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது,’ என்று கூறி அவருக்கு  ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.பெற்றோரே காரணம்நீதிபதி தனது தீர்ப்பில் மேலும், ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே வாழ்க்கையின் தத்துவங்கள், குடும்ப பாரம்பரியங்கள் போன்ற  விஷயங்களை சொல்லி கொடுத்து வளர்ப்பது இல்லை. இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு இதுதான் காரணம்,’ என்று தெரிவித்தார். …

Related posts

மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

ஆந்திராவில் இடிதாக்கி கணவன், மனைவி பலி