காட்பாடி சார் பதிவாளர் பணியிட மாற்றம்

வேலூர், டிச.21: காட்பாடி சார் பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக (பொறுப்பு) கவிதா பணியாற்றி வந்தார். இந்நிலையில், டிசி நிலத்தை, வேறு நபருக்கு மாற்றி பதிவு செய்ததாக புகார் வந்தது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் டிசி நிலத்தை, அவரது உறவினருக்கு மாற்றம் செய்யப்பட்டது என்பதும், தடையில்லா சான்று பெறாமல் பதிவு நடந்தும் தெரியவந்தது.

இந்நிலையில் காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பில் இருந்த கவிதா, வேலூர் மாவட்ட பதிவாளர் அலுவலத்திற்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வரும் நித்தியானந்தம், காட்பாடி சார் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்