செங்கல்பட்டு: தாம்பரம் மாநகராட்சியில், வெள்ளத்தடுப்பு பணி திட்டத்தின் கீழ் கலங்கல் தெரு முதல் இடும்பன் ஏரி வரை ரூ.390 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில், 51வது வார்டில், 15வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், கட்டப்பட்டு வரும் நகர்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மைய பணிகளையும் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருடன் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று கலந்துரையாடி பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்….