காடவராயன்பட்டியில் உயர்கோபுர மின் விளக்கு ஒளிருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

கந்தர்வகோட்டை,அக்.9: காடவராயன்பட்டியில் உயர்கோபுர மின் விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புனல்குளம் ஊராட்சிய சார்ந்த காடவராயன்ப்பட்டி கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாசித்து வருகிறார்கள். இந்த ஊரானது கந்தர்வகோட்டை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இங்கு அனைந்து தெருவிளக்குகள் முறையாக எரிந்தலும் சாலையில் முகப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு செயல்பாடு இல்லாமல் உள்ளது எனவே இந்த உயர் மின்கோபுர விளக்கினை சம்பந்தபட்ட துறையினர் செயல்பட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

 

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு