காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர வெள்ளி மாவடி சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெள்ளி மாவடி சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஏகாம்பரநாதர் சமேத ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி சூரியபிரபை, சிம்மம், சந்திரபிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில், முக்கிய உற்சவங்களில் ஒன்றான வெள்ளி மாவடி சேவையில் நேற்று முன்தினம் இரவு ஏகாம்பரநாதர், தேர் பவனியில் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு