காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம், மார்ச் 15: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம் மற்றும் திமுகவினனர், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளராக வக்கீல் எழிலரசன் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து வக்கீல் எழிலரசன், தனது ஆதரவாளர்களுடன் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் உள்ள பெரியார் சிலை, ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை, ஆடிசன் பேட்டையில் உள்ள காமராஜர் சிலை, திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத் தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி கார்த்திகேயன், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, ஒன்றிய செயலாளர் பூபாலன்,  அவைத்தலைவர் சந்துரு, மகளிர் அணி செல்வி, நிர்வாகி சசிக்குமார், பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் இருந்தனர்….

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி