காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் தொடக்க பள்ளி ஆரிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது.கோடைவிடுமுறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சியானது மாநிலம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் நடுநிலை பள்ளியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி வகுப்பு நடந்தது. அதில், காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டக்கல்வி அலுவலர் நடராசன், காஞ்சிபுரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள், பலராமன், கண்ணன் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் சுமார் 400 ஆசிரியர்கள் பங்கேற்றனர்….