Thursday, July 4, 2024
Home » காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 4 வகை சுவையுள்ள கனிதரும் 3500 ஆண்டு அதிசய மாமரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 4 வகை சுவையுள்ள கனிதரும் 3500 ஆண்டு அதிசய மாமரம்

by kannappan

காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்றதும் பஞ்ச பூத ஸ்தலங்களில் முதன்மையான மண் ஸ்தலமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் விளங்குகிறது. கோயில் கருவறையில் உள்ள சுவாமி மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார்.  இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளை மனமுறுகி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.இக்கோயில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் உள்ளது. இந்த மாமரம் 3500 ஆண்டு பழமையானது என கூறுகின்றனர். மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் உள்ளார். அம்பாள் தவம் செய்தபோது,  மாமரத்தின் கீழ் காட்சி கொடுத்து அம்பாளை மணம் முடித்தாராம். இன்றும் மாமரத்தை வணங்கிவிட்டு பல ஜோடிகள் திருமணம் செய்து வருகின்றனர். 4 வேதங்களை நான்கு கிளைகளாக கொண்ட மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளை கொண்ட கனிகளை தருகிறது.  பிள்ளைபேறு இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் கனியை சாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தற்போது மாங்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது. இந்த அதிசய மாமரத்தை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்….

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi