காசிமேடு மயான பூமி நாளை முதல் இயங்காது

சென்னை: காசிமேடு மயான பூமியில் பராமரிப்பு  பணிகள் நடைபெற உள்ளதால், நாளை முதல் வரும் 24ம் தேதி வரை இயங்காது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43க்குட்பட்ட காசிமேடு மயான பூமியின் எரிவாயு தகன மேடை எல்பிஜி தகன மேடையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வரும் 10ம்தேதி (நாளை) முதல் 24ம்தேதி வரை இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் மூலகொத்தளம் (வண்ணாரப்பேட்டை) மற்றும் திருவொற்றியூர் மண்டலம், வார்டு-9ல் உள்ள மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்