காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து, திருப்போரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. திருப்போரூர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பெட்ரோல் பங்க் வரை ஓஎம்ஆர் சாலையில், ஊர்வலமாக சென்று  காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதில், திருப்போரூர் நகர காங்கிரஸ் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செங்கை வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் பவானி, திருப்போரூர் தெற்கு வட்டார தலைவர் படூர் மெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் நகர காங்கிரஸ் சார்பில், திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருக்கழுக்குன்றம் நகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தயாளன், கமலஹாசன், கிருஷ்ணசாமி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பைக் மற்றும் காஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்….

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்