காங்கிரஸ் கட்சி சார்பில் கீழப்பாவூரில் இருசக்கர வாகன ஊர்வலம்

பாவூர்சத்திரம்: கீழப்பாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. கீழப்பாவூரில் காங்கிரஸ் கட்சி 139ம் ஆண்டு துவக்க விழா மற்றும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், நகர இலக்கிய அணி தலைவர் ராமசாமி, சுரேஷ் முருகன், ராஜேந்திரன், ரத்தினசாமி, வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சின்ன ராஜா, நகர ஓபிசி பிரிவு தலைவர் தாமோதரன், வக்கீல் பெரியசாமி, பாக்கியராஜ் முன்னிலை வைத்தனர். வக்கீல் ராமச்சந்திர பாண்டி வரவேற்றார். வட்டார இலக்கிய அணி தலைவர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் கொடி குறிச்சி முத்தையா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட துணைதலைவர் செல்வன், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து இருசக்கர வாகன ஊர்வலத்தை முன்னாள் எம்பி ராமசுப்பு துவக்கி வைத்தார். 200 இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று 139 கொடிகம்பங்களில் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்