காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் மார்த்தாண்டம்

மார்த்தாண்டம், நவ.17: 100 நாள் வேலை திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜ. அரசை கண்டித்து மேல்புறம் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் மடிச்சல் தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவர்கள் பாகோடு ராஜ், விளவங்கோடு எட்வின் ராஜ், மலையடி புஸ்பாகரன், வன்னியூர் ரதிஸ் குமார், களியக்காவிளை பென்னட், வட்டார பொருளாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணை தலைவர் லைலா ரவிசங்கர் மற்றும் மாநில செயலாளர் பினில் முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட பொதுசெயலாளர் சுஜின் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை