காங்கிரசார் எஸ்பிடம் புகார்

தர்மபுரி, ஜூலை 13:தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில், மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏவை, தரக்குறைவாக பேசிய தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுத்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இம்மனுவை தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் சம்பத்குமார் தலைமையில் ஐஎன்டியூசி தலைவர் மோகன், மாவட்ட மகிளா காங்aகிரஸ் தலைவர் காளியம்மாள், காங்கிரஸ் எஸ்சி பிரிவு பொருளாளர் மாதேஸ்வரன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் தங்கவேல், துணைத்தலைவர் கலைச்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தலைவர் முத்து ஆகியோர் எஸ்பியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்