காங்கயம், ஆக.28:காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான வாரசச்சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று கூடிய வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் 63 மாடுகளை கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 87 ஆயிரம் ரூபாய் வரையும், பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 வரையும் காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் 43 கால்நடைகள் ரூ.15 லட்சத்திற்கு விற்பனையானது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.