காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மின்கோபுர விளக்கை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

காங்கயம் : காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மின்கோபுர விளக்கை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காங்கயம் அரசு மருத்துவமனை காங்கயம் தாலுகாவின்  தலைமை மருத்துவமனையாகும்.இங்கு தினசரி புற நோயாளிகள் மட்டும் சுமார் 500 பேர் வரை வந்து செல்வார்கள். இதுதவிர மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள மின்கோபுர விளக்கு கடந்த சில நாட்களாக பழுது ஏற்பட்டதன் காரணமாக வளாகத்தின் ஒருபகுதி இருசூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள்நோயாளிகள் இரவு நேரங்களில் வளாகத்தில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளை சந்திக்க வரும் பொதுமக்களும் இருளில் தடுமாறி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான  மின்கோபுர விளக்கை உடனடியாக சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்

65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது