மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 3வது வார்டு பகுதியில் வரதா ரெட்டி நகர், ஓம் சக்தி நகர் மற்றும் ஓம்சக்தி நகர் விரிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அடைப்புகளை சரி செய்யாமல் விடப்பட்டதால் கால்வாய்கள் முழுவதும் மணல்களால் நிரம்பி மூழ்கியது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கியதால் மக்கள் கடும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அப்போதைய அதிமுக ஆட்சியில் அப்பகுதி மக்கள், பேரூராட்சி நிர்வாகத்துக்கு பல முறை கோரிக்கை வைத்தும் கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. இந்த நிலையில், 3வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிக்குமாரிடம் மக்கள் தங்களது பிரச்னைகளை தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார். தனது சொந்த செலவில் வார்டுக்கு உட்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரும் பணியை நேற்று முதல் ஆரம்பித்துள்ளார். இதையடுத்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்ட கவுன்சிலருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்….