கொடைக்கானல், ஜூலை 7: கொடைக்கானல் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசாணை 56ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு விரைந்து நடைமுறைப்படுத்திட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில், 35க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.