நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மூப்பனார் கோயில் தெருவை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் ராகுல் (23). கூலித்தொழிலாளியான இவருக்கு திருணமாகவில்லை. இவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. மேலும் தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். இதனால் யாரும் அவரிடம் பேசுவதில்லை. யாரும் பேசாமல் தனிமைப்படுத்தியதால் மனவேதனையில் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றுள்ளார்.இவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் கபில்வாசன். இவரது மனைவி ராஜாமணி (24). இவர்களுக்கு நவீனா (5) என்ற மகள், தருண் என்ற 3 வயது மகன் உள்ளான். கபில்வாசன் அப்பகுதியில் உள்ள சேகோ ஆலையில் வேலை செய்து வருகிறார். நேற்று கபில்வாசன் வீட்டின் வழியாக ராகுல் சென்றபோது, ராஜாமணி முறைத்து ஏளனமாக பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ராகுல் ஆத்திரத்தில் இருந்துள்ளான்.இதனிடையே நேற்றிரவு 7 மணியளவில் கபில்வாசனின் மகன் தருண், ராகுலின் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுவனை ராகுல் சரமாரி தாக்கி உள்ளான். மேலும் சிறுவனின் கழுத்தில் காலால் மிதித்துள்ளான். இதனால் சிறுவன் அலறி துடித்த நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த ராஜாமணி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராகுலிடம் இருந்து சிறுவனை மீட்டனர். பின்னர் அவனை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்தனர்….