திருப்பூர்: திருப்பூர், கூலிப்பாளையத்தை சேர்ந்தவர் சரண் (21). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீடு அருகே மகளிர் கல்லூரி உள்ளது. அதில் திருப்பூரை சேர்ந்த 21 வயது மாணவி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சரணுக்கும், மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் சரணின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவே அவரிடம் பேசுவதை மாணவி நிறுத்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து கரட்டாங்காடு பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றபோது மாணவியை வழிமறித்த சரண் தன்னை காதலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் மாணவி மறுத்தார். இதனையடுத்து சரண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்திலேயே வைத்துக்கொண்டு, ‘‘நீ காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’’ என்று கூறி மிரட்டினார். ஒரு கட்டத்தில் ‘‘நீ காதலிக்கவில்லை என்றால் என்னை நீயே கொன்றுவிடு’’ என்றும் மிரட்டியிருக்கிறார். தகவலறிந்த திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியிடம் ரகளையில் ஈடுபட்ட மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….