கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி மீட்பு

 

தேவகோட்டை, ஜூன் 1: தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி பூமயில் (65). இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தில் 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமயிலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்