கள்ளிக்குடி மருதங்குடியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமங்கலம், ஜூன் 23: மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், கள்ளிக்குடி ஒன்றியம் மருதங்குடியில் நேற்று புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய துணை தலைவர் கலையரசி கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ஆர்பி.உதயகுமார் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி நடந்த அன்னதானத்தினை துவக்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் சரவணன், தமிழரசன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஜெயலலிதா பேரவை பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாணவரணி இணை செயலாளர் சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை