கள்ளத்தொடர்பு வைத்திருந்த உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

 

உளுந்தூர்பேட்டை, செப்.2: உளுந்தூர்பேட்டை அருகே வங்கி பெண் அதிகாரி படுகொலை வழக்கில் திருக்கோவிலூர் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமணி (32), இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

சடலத்தை கைப்பற்றி எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், ரமணியின் கணவர் அசோக் (34) என்பவர் ரமணியை முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அசோக்கை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில் ரமணி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் உள்ளிட்ட சிலரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், மேலும் அவர்களிடம் உள்ள தொடர்பை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் கேட்காததால் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்துவந்த நிலையில், ரமணியின் செல்போன் எண்ணில் பேசியவர்கள் பதிவு எண் கொண்டு நடத்திய விசாரணையில் தற்போது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நந்தகோபால் தொடர்பில் இருந்ததாக தெரியவந்ததை அடுத்து, கள்ளக்குறிச்சி எஸ்பி, ரஜத் சதுர்வேதி திருக்கோவிலூர் எஸ்ஐ நந்தகோபாலை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி